திருவனந்தபுரம், மே 4- கொரோனா ஊரடங்கால் வெளிநாடு களில் சிக்கியுள்ளவர்களில் 4.13 லட்சம் கேரளியர்களும், வெளி மாநிலங்களி லிருந்து 1.5 லட்சம் பேரும் கேரளம் திரும்ப நோர்க்கா இணைய தளத்தில் பதிவு செய்துள்ளனர்.
வெளிநாடுகளிலிருந்து கேரளா திரும்ப உள்ளவர்களின் பெயர், முன்னுரிமை உள்ளிட்ட விவரங்கள் மத்திய வெளியுறவுத் துறைக்கும், தூதரகங்களுக்கும் அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வெளிநாடுகளிலிருந்து திரும்புவோரில் 61,009 பேர் வேலை இழந்தவர்கள். கர்ப்பிணி கள் 9,827, குழந்தைகள் 1,0628, முதியோர் 11,256 பேர். படிப்பை முடித்த 2,902 மாணவர் களும் ஆண்டு விடுமுறையில் வர விரும்பும் 70,638 பேரும், வருகை விசா காலாவதி யான 41,236 பேரும், விசா காலாவதி மற்றும் ரத்து ஆனவர்கள் 27,100 பேரும் கேர ளத்திற்கு திரும்பி வர பதிவு செய்துள்ளனர். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டோர் 806 பேரும் இதில் உள்ளனர். இவர்களுக்கான கொரோனா பரிசோதனை, கண்காணிப்பு, சிகிச்சைக்கு என விரிவான ஏற்பாடுகள் கேரளத்தில் உள்ள 4 சர்வதேச விமான நிலையங்களை ஒட்டி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலிருந்து 45,491 பேர்
வெளி மாநிலங்களிலிருந்து கேரளம் திரும்ப 1,50,054 பேர் கடந்த இரண்டு நாட்களில் பதிவு செய்துள்ளனர். இதில் அதிக பட்சமாக கர்நாடகத்திலிருந்து 49,233 பேரும், தமிழ்நாட்டிலிருந்து 45,491பேரும், மகாராஷ்டிரத்திலிருந்து 20,869 பேரும் பதிவு செய்துள்ளனர். திங்களன்று காலை வெளி மாநிலங்களிலிருந்து வரும் மலையாளி களுக்காக மாநில எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளை ஒட்டி பெரிய அள விலான பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஏராளமானோர் இரண்டு, நான்கு சக்கர வாகனங்களில் வந்தனர். தனி மனித இடை வெளியுடன் அவர்கள் பதிவை சரிபார்க்க வும், கொரோனா பரிசோதனைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஆசிரியர்கள், வருவாய், காவல், சுகாதாரத்துறையினர் ஈடுபட்டனர்.
தமிழக எல்லையில் உள்ள களியக்கா விளைக்கு திருச்சூரைச் சேர்ந்த அனிபாவும் நாசரும் முதலாவதாக வந்தனர். அவர்கள் கூறுகையில், நாகர்கோவிலில் கடந்த 2 ஆண்டுகளாக வேலை செய்து வரு கிறோம். திடீரென அறிவிக்கப்பட்ட ஊரடங் கால் கேரளத்திற்கு வர முடியாமல் சிக்கி னோம். நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றும், அவர்கள் தந்த இணைய தளத்தில் பதிவு செய்யவும் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு நோர்க்காவில் பதிவு செய்யலாம் என கேரள அரசு அறிவித்தது. 5 நிமிடத்தில் பதிவு ஆகி அனுமதியும் கிடைத்தது என தெரிவித்தனர்.